பொது சிவில் சட்டம்: போலி மதசார்பின்மையை காங்கிரஸ் கைவிட வேண்டும்- பா.ஜ.க.
சென்னை:
நாடு முழுமைக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தேசியவிவாதம் நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவாதங்களில் நாட்டின் மீது அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகள், அனைத்து மதத் தலைவர்கள்பங்கேற்க வேண்டும் எனவும் அக் கட்சி கோரியுள்ளது.
பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அதைசிறுபான்மையினர் எதிர்க்கின்றனர். இச் சட்டத்துக்கு காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு,
காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் தங்களது போலி மதசார்பின்மையைக் கைவிட்டுவிட்டு நாட்டின் நலன் கருதிசெயல்பட வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகளை மட்டும் குறி வைத்து ஓட்டு அரசியல் நடத்துவதைகைவிட வேண்டும்.
நாட்டின் ஒருமைப்பாடு, நலனில் அக்கறை செலுத்த வேண்டும். நாட்டின் இப்போதைய மிக முக்கியத் தேவையாகபொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. கருதுகிறது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகளை கூடியவிரைவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனறு பரிந்துரைத்துள்ளனர்.
இதை நாம் இப்போதாவது அமலாக்க முன் வேண்டும். இது தொடர்பாக சட்டம் கொண்டு வர பா..ஜ.கவுக்கோஅல்லது தேசிய ஜனநாயக முன்னணிக்கோ ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை. இதனால், காங்கிரஸ்நேர்மையாக நடந்து கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டு வர உதவ வேணடும்.
இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே தரைப்பாலம் அமைப்பதை எதிர்த்து முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்து என்றார் அவர்.