எதற்கெடுத்தாலும் கஞ்சா கேஸா?: கருணாநிதி கண்டனம்
சென்னை:
அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கஞ்சா கேஸ் போடுவது வழக்கமாகி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனுடன் நெருக்கமாக இருந்த மதுரைப் பெண் ஜனனி எனப்படும் செரீனா மற்றும்அவரது தாயார் ரெஜீனா மீது கஞ்சா விற்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கருணாநிதி கூறியுள்ளதாவது:
அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும், யார் எதிர்ப்பாக செயல்பட்டாலும் அவர்கள் மீது கஞ்சா வைத்திருந்ததாககேஸ் போடுவது வழக்கமாகி விட்டது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியின் மருமகன் ஒருவர் மீதே இந்த அரசுகஞ்சா கடத்தியதாக வழக்கு போட்டது.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதும் கஞ்சா கேஸ் போடப்பட்டது. அந்த வழக்குகள்எல்லாம் உண்மை என்று சொன்னால் செரீனா மீதான வழக்கும் உண்மை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சியில் நீதிமன்றங்களுக்கு என்ன மதிப்பு தரப்படுகிறது என்பது அரசு ஊழியர்கள் விவகாரத்தைப்பார்த்தாலே புரியும். 1 லட்சம் ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்,அதை கண்டுகொள்ளாமல் 30,000 ஊழியர்களை பணியில் சேர அரசு அனுமதிக்கவில்லை என்பது உச்ச நீதிமன்றத்தீர்ப்பை அரசு மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
அழகிரி வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக பத்திரிகைகளில்வெளியாகியுள்ள செய்தி, அழகிரி மீது இன்னொரு பொய் வழக்குப் போட அரசு தயாராகி வருவதையேகாட்டுகிறது.
அன்று திமுக பேரணியில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு பல பேர் உயிரைப் பறிக்க வீரமணியைப்பயன்படுத்திய அதே அதிமுக அரசின் போலீஸார்தான் இன்று அதே வீரமணியின் உயிரையும் பறித்துள்ளார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications