200 தலைமை செயலக ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்ப்பு
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதில் குழப்பம்நிலவும் நிலையில், தலைமைச் செயலகத்தில் 200 ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சட்டசபை, உணவு, வருவாய், சமூக நலம் மற்றும் சுகாரத் துறையில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி மற்றும் பெண்துணை செயலாளர் உள்பட 200 பேருக்கு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலில் அந்த பெண் துணைச் செயலாளன் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
ஆனால் வேலைநிறுத்த காலத்தில் அவர் பயிற்சிக்காக சென்றிருந்தது நிரூபிக்கப்பட்டதால் முதல் தகவல்அறிக்கையிலிருந்து பெயர் நீக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
மற்றொரு மூத்த அதிகாரி மருத்துவ விடுப்பில் இருந்தார். இதைத் தொடர்ந்து அவரது டிஸ்மிஸ் உத்தரவும் ரத்துசெய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications