For Daily Alerts
Just In
சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கோபால் ஆஜர்
ஈரோடு
போலீஸ் உளவாளி ராஜாமணி கொலைவழக்கில் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால்நேற்று ஆஜர் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உளவாளி ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோபாலின்பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
வழக்கின் முக்கிய குற்றவாளியாக வீரப்பன் சேர்க்கப்பட்டுள்ளான். வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபால், கோவைசிறையிலிருந்து சத்தியமங்கலம் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்.
அவரது காவலை ஆகஸ்ட் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி தேவநாதன் உத்தரவிட்டார். இதன் பின்னர் அவர்வெளியே கொண்டுவரப்பட்டார்.
அப்போது அவரது வக்கீல் மோகனுடன் சிறிது நேரம் ஆலோசித்தார். அதன் பின்னர் மீண்டும் கோவை சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
வருகிற 29ம் தேதி கந்தவேல் என்பவரின் கொலை வழக்கில் பவானி நீதிமன்றத்தில் கோபால்ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Comments
Story first published: Tuesday, July 29, 2003, 5:30 [IST]