அவதூறு வழக்கு: என் செலவையும் அரசே ஏற்க வேண்டும்- இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என் மீதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் அரசு தொடரும் அவதூறு வழக்குகளுக்கு ஆகும் செலவை தமிழகஅரசே ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அரசுக்கு எதிராக கருத்து சொன்னால், மக்கள் பிரச்சினைகள் குறித்துக் கருத்துக் கூறினால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவது இந்த ஆட்சியின் பொழுது போக்காகி விட்டது. இதுபோன்ற அவதூறு வழக்குகளில் இருதரப்புக்கும் ஆகும் செலவை, தமிழக அரசே ஏற்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நான் மனுத் தாக்கல்செய்யவுள்ளேன்.

தமிழ்நாட்டில் இப்போது கஞ்சா கேஸ் போடுகிறார்கள் என்றால் அது பொய் வழக்கு என்றாகி விட்டது. மதுரையில்ஜனனி என்ற செரீனா என்ற பெண்ணின் மீதும், அவரது தாயார் மீதும் கஞ்சா கேஸ் போடப்பட்டுள்ளது.அவர்களுக்குப் பின்னணியில் சில ரிெபய மனிதர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் யார், செரீனாவின் பின்னணி என்ன என்பதை போலீஸார் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படிஅனைவரையும் பணியில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் செயல்பட்டு வருகிறேன்.அதுபோலவே, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் சோ.பா. அவர்களும்முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

ஆனால், இதை விரும்பாத ஒரு சில சக்திகள்- அவர்கள் கட்சிக்கு உள்ளேயும் இருக்கிறார்கள், வெளியேயும்இருக்கிறார்கள்- எங்களைக் கவிழ்க்கும் வேலைகளில் கைகோர்த்து செயல்படுகிறார்கள். அவர்களைக் கண்டு நான்பயப்படப் போவதில்லை.

அந்த சக்திகளை (வாசன் கோஷ்டியை) அவர்களை ஒரு பொருட்டாகவே நான் நினைப்பதில்லை. காங்கிரசில்இரண்டு வகை உண்டு. ஒன்று கட்சி வளர்ச்சியில் ஈடுபடும் கூட்டம். இன்னொன்று மேலிடத்தில் இன்னொருவரைப்பற்றி புகார் கூறிக் கொண்ட திரியும் கூட்டம்.

டெல்லிக்குச் செல்லும் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறுவதிலேயேநேரத்தைக் கழிக்கிறார்கள். இவர்களது கோரிக்கைகளையும் புகார்களையும் சோனியா குப்பையில் தூக்கிப்போடுவார்.

நரேந்திர மோடியை தமிழகத்துக்குள் வர அரசு அனுமதிக்கக் கூடாது. குஜராத்தில் அவர் செய்த அட்டூழியங்கள்ஒரு கருப்பு வரலாறு என்றார் இளங்கோவன்.

இந் நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற வாசன் கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், தலைவர் பதவியிலிருந்துசோ.பாலகிருஷ்ணனையும், செயல் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனையும் நீக்கிவிட்டு மாநிலத்தலைவராக வாசனையே நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.

இந்தக் கோரிக்கை தான் குப்பைக்குப் போகும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+