For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனனிக்கு ரூ. 1 கோடி வந்தது எப்படி? விசாரிக்கக் கோருகிறார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரைப் பெண் ஜனனி என்ற செரினாவின் வீட்டில் ரூ. 1 கோடியே 40லட்சம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிய மக்கள்ஆர்வமாக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனியின் வீட்டிலிருந்து ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வளவு பெரிய தொகை ஒரு தனிநபரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டால் அந்தப் பணம் எப்படிவந்தது, எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டியது வருமான வரித்துறையின்கடமை இல்லையா?

எனவே, இதுகுறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்துஅறிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அவர்களுக்கு மத்திய அரசு தனது நடவடிக்கையை விளக்க வேண்டியது கடமை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X