குழந்தைகளுக்கு சங்கராச்சாரியார் பெயர் சூட்டினார் ஜெ.
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டி புரட்சி படைத்துள்ளார்ஜெயலலிதா.
அதிமுக கட்சி தலைமையகத்திற்கு முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாநேற்று வருகை தந்தார். அங்கு ஒரு ஜோடிக்கு கல்யாணம் செய்து வைத்த அவர் அதிமுகதொண்டர்களின் 34 குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார்.
கங்கா, யமுனா, சரஸ்வதி என்று ஆறுகளின் பெயர்களைச் சூட்டிய அவர், 2 குழந்தைகளுக்குவிஜயேந்திரர், ஜெயேந்திரர் என்று காஞ்சி சங்கராச்சாரியார்களின் பெயர்களையும் சூட்டி அருகில்இருந்த அதிமுகவினரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
தூய தமிழில் பெயர்கள் வைப்பதே திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் வழக்கம்.
ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியான ஜெயலலிதா பெரும்பாலும்தமிழில் பெயர்கள் வைப்பதில்லை.
இதன் உச்சகட்டமாக, காஞ்சி சங்கராச்சாரியார்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டிதிராவிடக் கட்சித் தலைவர்களில் தான் ஒரு தனி ரகம் என்பதை நிரூபித்து விட்டார்.