அதிமுகவிடமிருந்து மக்களை காக்க காங்கிரஸ் கூட்டுப் பிரார்த்தனை!!
சென்னை:
தமிழகத்தில் அராஜக அதிமுக ஆட்சி நடப்பதாகக் கூறி, ஜெயலலிதாவிடமிருந்து தமிழகத்தையும், தமிழகமக்களையும் காக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று மாநிலம் முழுவதிலும் கூட்டுப் பிரார்த்தனைநடத்தப்பட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டுப் பிரார்த்தனை தமிழகம்முழுவதிலும் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் நடந்தது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மசூதியில் இந்த கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. இதில் செயல் தலைவர்இளங்கோவன், பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்சியின் தலைமையகமான சத்யமூர்த்தி பவனிலிருந்து, அண்ணா சாலை மசூதிக்கு காங்கிரஸ்தொண்டர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசாரை மீறி கார்களில் ஏறி காங்கிரசார் சென்றனர்.