கந்து வட்டி கொடுமை: மனைவி, 3 குழந்தைகளை கொன்று நகை ஆசாரி தற்கொலை
திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த நகை செய்யும் ஆசாரி ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு சயனைட் விஷம்கொடுத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டிக் கொடுமையால் அவர் இந்தமுடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
திருச்சி சந்துக்கடை செளந்தரபாண்டியன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. அப் பகுதியில் நகைசெய்யும் சிறிய கடை வைத்துள்ளார். கந்து வட்டிக்காரர்களிடம் ஏராளமான கடன் வாங்கி வைத்திருந்த அவரால்கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து நகை செய்ய பயன்படுத்தப்படும் சயனைடு கலந்த ரசாயனத்தை மனைவி லதா, மகன் சீனிவாசன்(13), மகள்கள் சிவரஞ்சனி (10), ஸ்வாதி (4) ஆகியோருக்கு உணவுடன் கலந்து கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அவர்கள் துடிதுடித்து இறந்தனர். அவர்கள் இறந்ததும் தானும் அந்த விஷம் கலந்த உணவைசாப்பிட்டு அவரும் பரிதாபமாக இறந்தார். வீடு நெடு நேரமாகத் திறக்காததால் அண்டை வீட்டினர் ஜன்னல்வழியே உள்ளே எட்டிப் பார்த்தபோது ஐந்து பேரும் வாயில் நுரை தள்ளி இறந்து போய் கிடந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் திருப்பதி செல்லும் வழியில் உள்ள காட்டுப் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வீட்டின் சுவர் மற்றும் நோட்டுகளில் கந்து வட்டிக்கு பணம் வாங்கியது யார், யாரிடம் அவர்களுக்கு தொடர்ந்துகொடுக்கப்பட்ட வட்டி ஆகியவற்றை குறித்து வைத்துள்ளார் புண்ணியமூர்த்தி. எனவே, இந்தக் கும்பல் மீதுபோலீஸ் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications