கன மழைக்கு 3 பேர் பலி
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதேபோல,விழுப்புரம்,மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன்பலத்த மழை பெய்தது.
கன மழைக்கு பெரிய மரம் ஒன்று கீழே விழுந்ததில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதில் காரில் பயணம் செய்த 2பேர் நசுங்கி இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதில் டி. கூடலூர் என்றஇடத்தில் சித்தாள் ஒருவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி இறந்தார்.
சென்னையிலும் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. இதனால் பல சாலைகளில் மழை நீர்ஆறு போல ஓடியது. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இன்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications