வீரப்பன் வேட்டை தீவிரம் .. அதிரடிப்படைத் தலைவர்
ஈரோடு
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி மும்ரமாக நடந்து வருவதாகவும், தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும், தமிழக அதிரடிப்படைத் தலைவரும், கூடுதல் டிஜிபியுமான நடராஜன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் தேவர் மலை பகுதியில் மழை வாழ் மக்களுக்கான இலவச மருத்துவ மூகாமைத் துவக்கி வைத்தஅவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பன் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்படவில்லை.காட்டுக்குள் மழை பெய்து வந்த போதிலும், தொடர்ந்து தீவிர தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.
வீரப்பனைப் பிடிக்க புதிய வியூகம் வகுக்கப்பட்டு அதன் படி தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கிராம மக்களின்ஆதரவை படிப்படியாக வீரப்பன் இழந்து வருகிறான்.
முன்பு போல வீரப்பனுக்கு அவர்கள் உளவு சொல்வதில்லை, மாறாக, அதிரடிப்படையினருக்கு தேவையானதகவல்களை கூறி வருகிறார்கள்.
பழங்குடி மக்களுக்காக பல்வேறு மருத்துவ மூகாம்களை அதிரடிப்படை நடத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 26இலவச மருத்துவ மூகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications