சென்னையில் காணாமல் போன சிங்கப்பூர் வழக்கறிஞர்
சென்னை:
சிங்கப்பூலிருந்து வழக்குத் தொடர்பாக சென்னை வந்த வழக்கறிஞர் காணவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூல் வழக்கறிஞராக இருந்து வருபவர் சுப்ரமணியம் என்ற ரவி. சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கும்,சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை இருந்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை நிறுவனத்துடன் சமரசம் பேசுவதற்காக சிங்கப்பூலிருந்து வந்திருந்தார் ரவி.
சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். பின்னர் ஆழ்வார் திருநகரில் உள்ள தனது உறவினர்வீட்டிற்குச் சென்றார். 2ம் தேதி காலை தனது நண்பரைப் பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் அதன் பிறகுவீடு திரும்பவில்லை. இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸில் ரவியின்உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
சமரசம் பேச வந்த இடத்தில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாகசெங்கை கிழக்கு மாவட்ட போலீஸாரும், சென்னை மாநகர போலீஸாரும் இணைந்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications