சென்னை திரும்பினார் ஜெ: 8,063 பேர் பட்டியல் தயார்
சென்னை:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலை கொடுக்கப்படவுள்ள 8,306 பேர் கொண்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் பட்டியல் தயாராகி விட்டதாகத் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்குப் பின் இன்றுமாலை இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 14,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 8,306 பேருக்கு மீண்டும் வேலைகொடுக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒத்துக் கொண்டது.
ஆனால் மீண்டும் வேலை பெறப் போகும் 8,306 பேர் யார் என்பதில் இன்று வரை குழப்பம் நிலவி வருகிறது.இதனால் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் அரசு அலுவலகங்கள் இன்னும் மாமூல் நிலைக்குத்திரும்பவில்லை.
இந் நிலையில் ஹைதராபாத்தில் ஓய்வுக்காக சென்றிருந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன்நேற்றிரவு சென்னை திரும்பினார்.
இதையடுத்து இன்று காலை போயஸ் தோட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஜெயலலிதாஆலோசனை நடத்தினார்.
அப்போது மீண்டும் வேலை பெறப் போகும் 8,306 பேர் கொண்ட அரசு ஊழியர், ஆசிரியர் பட்டியலை மாநிலநிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் மெய்கண்டதேவன் முதல்வரிடம் வழங்கினார். ஊழியர் சங்கத் தலைவர்கள்பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதால் 14,000 பேரையுமே மீண்டும் மன்னித்து வேலையில் சேர்க்கலாமா என்றும்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications