For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனனியின் சிறைக் காவல் 22ம் தேதி வரை நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jananiநடராஜனுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஜனனி மற்றும் அவரது தாயார், கார் டிரைவர் ஆகியோரது சிறைக்காவல் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா வைத்திருந்ததாக கூறி மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனி என்ற செரீனா, அவரது தாயார் ரெஜீனா,கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடராஜனுடன் ஜனனிக்கு இருந்த தொடர்பை விரும்பாத சசிகலா தான், தனது செல்வாக்கைப்பயன்படுத்தி ஜனனியை மாட்ட வைத்துள்ளதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந் நிலையில் ஜனனி, ரெஜீனா மற்றும் சதீஷ் ஆகியோரின் சிறைக் காவல் முடிவடைந்ததையொட்டி, நேற்று மதுரைபோதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களது காவலை வருகிற 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார்.

பின்னர் ஜனனி மற்றும் அவரது தாயாருடன் அவர்களது வக்கீல் சங்கரபாண்டியன் பேச அனுமதிக்கப்பட்டார்.அரை மணி நேரத்திற்குப் பிறகு ஜனனியும், அவரது தாயார் ரெஜீனா மற்றும் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீண்டும்திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜனனி கொண்டு வரப்பட்டதையடுத்து மதுரை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கடந்த முறை வந்தததை விட இந்த முறை ஜனனி கொஞ்சம் தெளிவான முகத்துடன் இருந்தார்.

எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வவு வேகமாக ஜாமீனில் வெளியே எடுக்குமாறு ஜனனி கேட்டுக்கொண்டதாக அவரது வழக்கறிஞரும் நடராஜனுக்கு மிக நெருக்கமானவருமான சங்கரபாண்டியன் பின்னர்நிருபர்களிடம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X