For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடுகளவுக்கும் பொருந்தா காரணங்கள்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடித்துத் தள்ளியதற்கு தமிழக அரசு கூறும் காரணங்கள் ஒன்றுகூட கடுகளவுக்கும் ஏற்கும்படியாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சீரணி அரங்கம் இருந்த இடத்தில் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்து விட்டதாக அரசு கூறுகிறது.அருகாமையில் உள்ள காவல்துறை தலைவர், காவல்துறை ஆணையர் ஆகியோரை மீறியா சமூக விரோதசெயல்கள் நடந்து விட்டன. அப்படியென்றால் சமூக விரோதிகளைத் தடுக்காதது யார் குற்றம்?

கடலுக்கு அருகில் இருப்பதால் துருப் பிடித்து கட்டடம் இடிந்து விடும் நிலைக்குத் தள்ளப்பட்டதால்இடிக்கப்பட்டதாக இன்னொரு காரணம். இதே கடற்கரையில்தான் எம்.ஜி.ஆர்.சமாதி, கலங்கரை விளக்கம், மற்றதலைவர்களின் சிலைகள் உள்ளன. அவையெல்லாம் சிறப்பாக பராமரிக்கப்பட்டபோது, சீரணி அரங்கத்தைமட்டும் அரசு பராமரிக்காமல் விட்டது ஏன்?

எனவே சீரணி அரங்கத்தை இடித்துத் தள்ளியதற்கு அரசு கூறும் காரணங்கள் ஒன்று கூட கடுகளவு கூட ஏற்கமுடியாத பொருந்தாக் காரணங்கள் ஆகும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X