காதலர் தற்கொலை: திருடா திருடி பட ஹீரோயினிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை
சென்னை:
|
திருடா திருடி படத்தில் தனு<�ஷ்டன் நடிகை சுகி
ராகவேந்திரா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அவர் விஷம் கொடுத்து கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கில் சிறிய ரோல்களில் நடித்து வந்த ராகவேந்திராவுடன் காதல் ஏற்பட்டது.இந் நிலையில் சுகியும் சினிமாவில் நுழைந்தார். அது முதல் அவருக்கு பல திரையுலகப் புள்ளிகளுடன் தொடர்புஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சுகியை ராகவேந்திரா வற்புறுத்திவந்துள்ளார். இந் நிலையில் நேற்று முன்தினம் சுகியின் வீட்டிலேயே ராகவேந்திரா தூக்கு போட்ட நிலையில்கண்டுபிடிக்கப்பட்டார்.
நடிப்பது தொடர்பாக சுகிக்கும் ராகவேந்திராவுக்கும் இடையே வழக்கமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,அப்போது சுகியை ராகவேந்திரா அடித்ததாகவும், அதில் சுகி மயங்கி விழ, அவர் இறந்துவிட்டதாக பயந்தராகவேந்திரா தூக்கு போட்டுக் கொண்டதாகவும் சுகியின் வீட்டினர் போலீசிடம் தெரிவித்தனர்.
|
நடிகை சுகி
அப்போது, தான் நடிபபது பிடிக்காமல் ராகவேந்திரா மனமுடைந்து 2 தடவை விஷம் குடித்து தற்கொலைக்குமுயன்றதாகவும் அப்போதெல்லாம் நான் தான் அவரைக் காப்பாற்றினேன் எனவும் போலீசாரிடம் சுகிதெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த அன்று இந்த வாக்குவாதம் முற்றியது. அப்போது அவர் தன்னைத்தானேஅரிவாள்மனையால் வெட்டிக் கொள்ள முயன்றார். நான் அதைத் தடுத்தபோது என்னை முகத்தில் குத்தினார்.
ஆனால், ராகவேந்திராவின் தாயார் நாகமணி இதை மறுத்துள்ளார். போலீசாரிடம் அவர் கூறியுள்ளதாவது: |
என் மகன் சுகியை திருமணம் செய்ய விரும்பினான். ஆனால், சினிமா, டிவியில் நடித்து கையில் காசு சேர்ந்ததும்என் மகனை சுகி உதறிவிட்டாள். நடிகை சுகியை அடிக்கடி என் மகன் தொந்தரவு செய்வதாக நினைத்து அவனுக்குசுகி வீட்டினரே விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டுள்ளார்கள் என்றுசந்தேகப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
![]() |
தற்கொலை செய்து கொண்ட ராகவேந்திரா
இந் நிலையில் ராகவேந்திராவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்என்று தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ராகவேந்திராவின் சாவுக்கு, நடிகைசுகி எந்தவிதத்தில் காரணமாக இருந்தார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலையாகவேஇருந்தாலும், தற்கொலையை சுகி தூண்டினாரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
|
திருடா திருடி படத்தில் தனு<�ஷ்டன் நடிகை சுகி
இந் நிலையில் அசோக் நகர் போலீஸார் 3-வது நாளாக இன்றும் நடிகை சுகியிடம் விசாரணை நடத்தினர். சுகியைஅசோக் நகர் காவல் நிநலையத்திற்கு வரவழைத்து இந்த விசாரணை நடந்தது.


