11 ஆண்டுகால காதல்.. இப்போது கணவருக்கு கேன்சர்! பதவியை தூக்கி எறிந்த துளசி கப்பார்ட்!
வாஷிங்டன்: அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குனர் துள்சி கப்பார்ட், தனது கணவர் ஆபிரகாமுக்கு மிகவும் அரிய வகை எலும்புப் புற்றுநோய் கண்டறியப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
துளசி கப்பார்ட்டின் கணவர் ஆபிரகாமுக்கு சமீபத்தில் மிகவும் அரிதான ஒரு வகையான எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் அவர் கடுமையான மருத்துவச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது கணவரின் அருகில் இருந்து அவரை முழுமையாக கவனித்துக்கொள்வதற்காக பொதுச் சேவையிலிருந்து தற்காலிகமாக விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கணவரின் ஆதரவு
தங்கள் 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், தான் கிழக்கு ஆப்பிரிக்காவில் கூட்டு சிறப்பு நடவடிக்கைப் பணியில் இருந்தபோதும், பல அரசியல் பிரச்சாரங்களின் போதும், தற்போதைய பதவியில் இருந்தபோதும் தனது கணவர் தனக்கு ஒரு தூணாக விளங்கியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த இக்கட்டான நேரத்தில் தற்போதைய பணிச்சுமை மிகுந்த பதவியில் நீடித்துக்கொண்டு, அவரை இந்தத் தனிமைப் போராட்டத்தில் தவிக்கவிடத் தன் மனசாட்சி இடம் தரவில்லை என எழுதியுள்ளார்.
ராஜினாமா
தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தின் பணிகள் எவ்விதத் தொய்வும் இன்றி சுமுகமாக வேறொருவரிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புவதாகவும், அதன் காரணமாக இந்த ராஜினாமா வரும் ஜூன் 30, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றியுரை
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த உயரிய பதவியில் தன்னை வழிநடத்த வாய்ப்பளித்த அதிபருக்கும், அமெரிக்க மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கடிதத்தை முடித்துள்ளார். கடிதத்தின் இறுதியில் அவரது வழக்கமான "With love and aloha" என்ற வாழ்த்துடன் கையெழுத்திட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications