சிறையிலிருந்து வெளியே வந்ததும் திமுகவை வறுத்தெடுத்த சவுக்கு சங்கர்! விஜய்க்கு வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து வெளியான நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து, முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார்.

கடந்த திமுக ஆட்சி மீது கடுமையா விமரச்னங்களை வைத்தவர்களில் முக்கியமானவர் சவுக்கு சங்கர். பலருமுறை அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Savukku Shankar

தற்போது அவர் ரிலீசாகியிருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் பேசியதாவது, "எங்கு என்னுடைய உழைப்பு வீணாகிவிடுமோ என்று பயந்திருந்தேன். ஆனால் திமுகவை தூக்கி எறிந்ததன் மூலம், கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததன் மூலம், மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கறார்கள். அதன்படி விஜய் ஆட்சியை நடத்தி வருகிறார்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், “திமுகவை போல ஊடகங்களை ஒடுக்கிய அரசை நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் சவுக்கு மீடியா ஊழியர்கள் சித்தரவதை செய்யப்பட்டனர். என்னுடைய தாயார் ஏன் அகால மரணமடைந்தார் என்பதை தவெக உட்பட அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். எனவே அருண் ஐபிஎஸ் மீது முதல்வர் என் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுப்பார். எல்லா அரசுகளும் ஊழியர்களிடம் கெஞ்சும், கோரிக்கை வைக்கும். ஆனால், திமுக அரசு மட்டும்தான் ஊடகத்தை கடுமையாக ஒடுக்கியது.

ஆனால் விஜய் தலைமையிலான அரசு மிகவும் நேர்மையாக இருக்கிறது. வழக்கமாக குண்டாஸ் ரத்து செய்யப்படுகிறது எனில், அது சிறைச்சாலைக்கு வர 8-10 நாட்கள் ஆகும். ஆனால், என்னுடைய விஷயத்தில் நான் கடந்த திங்கள் கிழமை அட்வைசரி போர்டு முன்பு ஆஜராகியிருந்ததேன். புதன்கிழமை ரத்து வந்தது. அதை முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உடனடியாக சிறைக்கு அந்த உத்தரவை அனுப்பியிருக்கிறார். எனவே நான் இன்று விடுதலை ஆகியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+