For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது ஜெயாவின் சுதந்திர தின பரிசு: வழக்கு குறித்து கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்களை திசை திருப்பும் விதத்திலேயே என் மீதும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் டெஸ்மா சட்டத்தை பாயவிட்டிருக்கிறார் ஜெயலலிதா எனறு திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தன் மீதும் பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதும் டெஸ்மா வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறித்து கருணாநிதிநிருபர்களிடம் கூறியதாவது:

அரசின் நிர்வாகக் கோளாறுகள், நிர்வாக குளறுபடிகள் மக்களுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக, மக்களைதிசை திருப்பும் வகையில்தான் எங்கள் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் பிரச்சினையையும், தமிழக அரசின் பழிவாங்குதல் நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வெட்ட வெளிச்சமாக்கியதை அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இப்போது போடப்பட்டுள்ள வழக்கு, ஜெயலலிதா அரசு எங்களுக்குக் கொடுத்த சுதந்திர தினப் பரிசாகவேகருதுகிறேன் என்றார் கருணாநிதி.

இந்த வழக்கின் மூலம் காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகளுடன் திமுகவுக்கு நெருக்கம் அதிகரிக்குமா என்றுகேட்டபோது,

அரசு இதுபோலவே தொடர்ந்து செயல்பட்டால், சிறையில் இடத்தைப் பங்கிட்டுக் கொள்வது குறித்து காங்கிரஸ்மற்றும் இடது சாரிக் கட்சிகளுடன் கண்டிப்பாக பேசுவோம் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X