நம்பிக்கையில்லா தீர்மானம்: நடுநிலை வகிக்க அதிமுக முடிவு
சென்னை:
மத்திய தேசிய ஜனநாய முன்னணிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதுநடுநிலை வகிப்பது என அதிமுக முடிவு செய்துள்ளது.
இன்று நடந்த அக் கட்சியின் செயற்க் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்நிருபர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,
வாஜ்பாய் அரசுக்கு எங்களிடம் யாரும் ஆதரவு கேட்கவில்லை. கேட்காத ஆதரவை வலியப் போய் எல்லாம்நாங்கள் தர மாட்டோம். அந்த அவசியமே எங்களுக்கு இல்லை. இதனால் மக்களைவையில் வாக்கெடுப்புநடக்கும்போது அதிமுக எம்.பிக்கள் வெளியேறி விடுவர்.
மேலும் வாஜ்பாய் அரசுக்கு ஆபத்து ஏதும் இல்லை. இதனால் எங்கள் ஆதரவும் தேவையில்லை. காங்கிரஸ்கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திலும் எங்கள் எம்.பிக்கள் பங்கேற்கமாட்டார்கள்.
கடந்த சனிக்கிழமை எனது போயஸ் தோட்ட வீட்டுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும்பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொலைபேசி செய்துள்ளார். ஆனால், நான் அப்போது வீட்டில்இல்லை. எதற்காக அவர் என்னுடன் பேச விரும்பினார் என்று தெரியவில்லை.
மத்திய அரசுக்கு ஆதரவைத் தெரிவிப்பதில் திமுக ஏன் கால தாமதம் செய்தது என்று கேட்க விரும்புகிறேன்.நீங்களும் (நிருபர்கள்) இதை அவர்களிடம் (கருணாநிதியிடம்) கேட்க வேண்டும். வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவுதெரிவித்ததால் தான் நாங்கள் ஓட்டெடுப்பை புறக்கணிக்கிறோம் என்று சொல்வது நியாயமற்றது என்றார்ஜெயலலிதா.