For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தா.கி. கொலைக்கு உடந்தை: அழகிரி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் மீது மதுரை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். உட்கட்சி மோதல் தொடர்பாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்டதால், திமுக தலைவர் கருணாநிதியின் மகன்அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மதுரை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதில் அழகிரி மீது கொலைக்கு உடந்தையாக இருந்தது மற்றும் கொலை செய்வதற்கு சதி செய்தது ஆகியகுற்றச்சாட்டும், மற்ற 12 பேர் மீதும் கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

வழக்கில் மொத்தம் 114 சாட்சிகளும், 52 ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X