தேர்தல் நிதி வசூல்: தென் மாவட்டங்களுக்கு புறப்படும் கருணாநிதி
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலுக்காக கட்சிக்கு நிதி வசூலிக்க திமுக தலைவர் கருணாநிதி இன்று தென் மாவட்டங்களுக்குப்புறப்படுகிறார்.
ஏற்கனவே தஞ்சை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்களில் பங்கேற்ற கருணாநிதி, அவற்றைச்சுற்றியுள்ள மாவட்டங்களிடம் நிதியை வசூலித்துவிட்டார்.
இந் நிலையில் இன்று இரவு நெல்லை புறப்படுகிறார். ரயில் மூலம் திருநெல்வேலி செல்லும் அவர் நாளைஅங்குள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அப்போது நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் வழங்கும் நிதியை பெற்றுக் கொள்வார்.
நாளை மறுதினம் (24ம் தேதி) பரமகுடி செல்லும் கருணாநிதி அங்கு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டதேர்தல் நிதியைப் பெறுகிறார்.
25ம் தேதி மதுரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக வழங்கும் தேர்தல்நிதியைப் பெறுகிறார்.
ஒவ்வொரு மாவட்டமும் சுமார் ரூ. 1 கோடியை தேர்தல் நிதியாக வழங்க வேண்டும் என கருணாநிதிநிர்ணயித்துள்ளார். ஆனால், பல மாவட்டங்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட இரண்டு, மூன்று மடங்குநிதியை கருணாநிதியிடம் வழங்கி வருகின்றன.