கோட்டை வளாகத்தில் ஜெவுக்காக புது "ஹெலிபேட்" !
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வந்து இறங்கவும் புறப்படவும் வசதியாக, சென்னைதலைமைச் செயலகத்திற்கு எதிரே புதிதாக ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு எதிரே வாகனங்களை நிறுத்துவதற்கான காலியிடம் உள்ளது.இந்த இடத்தில் தற்போது வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தும் ஹெலிகாப்டர் இனிமேல் இங்கிருந்தே புறப்பட்டுச்செல்லவுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் இன்று நடத்தப்பட்டது. அரசு ஹெலிகாப்டர் இன்றுகாலை இங்கு வந்து இறங்கி பின்னர் கிளம்பிச் சென்றது.
சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் செல்லும்முன் விமான நிலையத்துக்கு காரில் செல்ல வேண்டியுள்ளது. அதைத் தவிர்க்கவும் நேரடியாகதலைமைச் செயலகத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பிச் செல்லும் வகையில் இந்த ஹெலிபேட்உருவாக்கப்பட்டுள்ளது.
இது போயஸ் தோட்டத்துக்கும் அருகாமையிலேயே இருப்பதால் இனி விமானம் ஏற மட்டுமேமீனம்பாக்கம் செல்வார் ஜெயலலிதா. மற்றபடி இந்த ஹெலிபேடையும் ஹெலிகாப்டரையும் பிறபயணங்களுக்கு ஜெயலிலதா பயன்படுத்துவார்.












Click it and Unblock the Notifications