ஈரோடு ரயில் நிலையத்தில் தடம் புரண்ட சென்னை-ஆழப்புலா எக்ஸ்பிரஸ்: ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு
கோவை:
சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினும் இருபெட்டிகளும் ஈரோடு ரயில் நிலையத்துக்குள் இன்று அதிகாலை தரம்புரண்டன. இதனால் இந்த மார்க்கத்தில்அனைத்து ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3 மணியளவில் இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது. அப்போது ரயிலின் என்ஜினும்அதன் பின்னால் இருந்த இரு பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.
இதனால் பயங்கர ஒலி எழுந்தது. ரயிலும் பயங்கரமாகக் குலுங்கியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள்அலறிக் கொண்டு எழுந்தன்.
இதையடுத்து அந்த இரு பெட்டிகளையும் என்ஜினையும் அந்த இடத்திலேயே விட்டுவிட்டு பிற பெட்டிகள்இன்னொரு என்ஜின் மூலமாக பின்னால் இழுத்துச் செல்லப்பட்டன. காவிரி ரயில் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் இன்னொரு தண்டவாளம் வழியாக அந்தப் பெட்டிகள் ஈரோடு ரயில் நிலையத்துக்குள்கொண்டு வரப்பட்டன.
இதனால் அப்போது ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரஸ், குர்லாஎக்ஸ்பிரஸ், பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை வழியிலேயே நிறுத்த வேண்டிய நிலைஏற்பட்டது. இவை சுமார் 4 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு கிளம்பிச் சென்றன.
தண்டவாளத்தில் இருந்த சிறிய பிரச்சனையே இந்த தடம் புரளலுக்குக் காரணம் என்று தெரிகிறது. தடம்புரண்டஎன்ஜினையும் பெட்டிகளையும் அங்கிருந்து அகற்றும் பணி முழு வீச்சில் நடந்தது. இன்று காலை இந்தப் பணிமுடிவடைந்தது ரயில் போக்குவரத்து சீரானது.
முன்னதாக தடம் புரண்ட ஆழப்புழா எக்ஸ்பிரசில் இருந்த அனைத்துப் பயணிகளும் வேறு ரயில் முலம்ஆலப்புழைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications