விநாயகர் சதுர்த்தி: பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் வேண்டாம்- சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
விநாயகர் சதுர்த்தியின்போது, பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடல், குளங்கள்,கிணறுகளில் கரைக்க வேண்டாம். களிமண்ணால் செய்த சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேணடும் எனகாஞ்சி சங்கராச்சாயார் ஜெயேந்திரர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைகள் செய்து பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். முன்பு போலஇல்லாமல் இப்போது பிளாஸ்டர் ஆப் பாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகள்உருவாக்கப்படுகின்றன. பின்னர் இவை கடல், குளம், கிணறுகளில் கொண்டு போய்க் கரைக்கப்படுகின்றன.
ஆனால், அவை கரைவதில்லை. இதனால் தண்ணீர் அசுத்தப்படுகிறது. இது உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தீங்குவிளைவிக்கிறது.
பிளாஸ்டர் ஆப் பாஸ் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் லேசில் கரைவதில்லைஎன்பதால், பக்தர்கள் அந்த விநாயகர் சிலைகளை கம்புகளால் அடித்து, உடைத்து கரைக்கிறார்கள். இங்கு பக்தியேபோய் விடுகிறது.
எனவே, களிமண் சிலைகளையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது தண்ணீல் எளிதில்கரையும். பக்தியும் இருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.