விமானப் படையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைவு: ஏர் சீப் மார்ஷல் கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் கிருஷ்ணசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை தலைைமச்செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் முதல் முறையாக விமானப் படைக் கண்காட்சி நடக்கவுள்ளது. இந்திய விமானப் படை விமானங்கள்பல்வேறு சாகஸங்களை செய்து காட்டவுள்ளன. வரும் செப்டம்பர் 6ம் தேதி இந்தக் கண்காட்சி நடக்கிறது.

தமிழக வாலிபர்களை விமானப் படைக்கு இழுக்கும் முயற்சியாக இந்தக் கண்காட்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில்பங்கேற்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கவே இன்று அவரை கிருஷ்ணசாமி சந்தித்தார்.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, இந்திய விமானப் படையில் ஊழியர்களின்எண்ணிக்கை தமிழகத்தின் பங்கு குறைவாகவே உள்ளது. மாநிலவாரியான பிரதிநிதித்துவப்படி இருக்க வேண்டியஅளவை விட 3 சதவீதம் குறைவாகவே உள்ளது. இந்தக் குறையை நீக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

மிக்-21 ரக விமானங்கள் பறக்கவே லாயக்கற்றவை என்று சொல்வது பெரிய தவறு. அந்த பழைய விமானங்களைஇயக்க மிகுந்த திறமையும் லாவகமும் வேண்டும். இந்த விமானங்கள் விபத்துக்குள்ளாவதற்கு விமானத்தை குறைசெல்ல முடியாது.

நமது விமானப் படையினர் அமெரிக்காவிலும், வளைகுடா நாடுகளிலும் கூட நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+