For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிநீருக்காக மேட்டூர் அணை நீர் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்களின் குடி நீர்த் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத்திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூரின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 52 அடியாக உயர்ந்துள்ளது.தஞ்சை மாவட்ட விவசாயத்துக்காக நீரை அரசு சேமித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து நீர்திறந்துவிடப்படவில்லை.

இந் நிலையில் குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஈரோடு, நாமக்கல்,சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மேட்டூர் அணையைத் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி இன்று முதல் 3நாட்களுக்கு, வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்து விடப்படும். அதன் பிறகு 7 நாட்களுக்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X