விநாயகருக்காக கோபுரத்தில் ஏறி தர்ணா !
சென்னை:
விநாயர் சிலையை பிரதிஷ்டை செய்ய போலீஸார் அனுமதிக்க வேண்டும் என்று கோரி செல்போன் சிக்னல்கோபுரத்தில் ஏறி நின்று தர்ணா செய்தவருடன் போலீஸார் சமரசம் பேசி கீழே இறங்கி வரச் செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர். மேம்பாலத்திற்குக் கீழே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ர் சிலைபிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. தொடக்கத்தில் அனுமதிகொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று அங்கு சிலை வைக்க இந்து முன்னணியினர் சென்றபோது, போலீஸார் அனுமதிக்கமறுத்துவிட்டனர்.
இதனால் போலீஸாருக்கும் இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந் நிலையில் ஜெயவேல்என்பவர் அருகில் இருந்த செல்போன் சிக்னல் கோபுரத்தில் சரசரவென ஏறினார்.
சிலை வைக்க அனுமதி கொடுத்தால்தான் கீழே இறங்குவேன். இல்லாவிட்டால் கீழே குதித்துவிடுவேன் என்றுமிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் ஜெயவேலை கீழே இறங்கி வருமாறு கெஞ்சினர். இந்து முன்னணிஅமைப்பின் தலைவர்களும் அங்கு விரைந்து வந்து ஜெயவேலை இறங்கி வருமாறு வற்புறுத்தினர்.
சுமார் அரை மணி நேர கெஞ்சலுத்துப் பிறகே ஜெயவேல் கீழே இறங்கி வந்தார். சிலை பிரதிஷ்டை தொடர்பாகஇந்து முன்னணியினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.