திமுக பேரணிக்கு சோனியாவுக்கு அழைப்பா?: கருணாநிதி மறுப்பு
சென்னை:
வரும் 17ம் தேதி திமுக சார்பில் நடத்தப்படவுள்ள அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் பேரணிக்கு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி வெறும் புரளி என்று கருணாநிதிகூறியுள்ளார்.
டெல்லியில் வெளியாகும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் இன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.இதை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.
அண்ணா அறிவாயலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் உறவு என்று யூகமான செய்திகள் பல வருகின்றன. எங்களுக்கும், சோனியாகாந்திக்கும் இடையே தொடர்பே கிடையாது. கடிதப் போக்குவரத்தும் கிடையாது.
அண்ணா பிறந்த நிாள் விழாவுக்கு சோனியா காந்தியை அழைக்கப் போவதாக வெளியான செய்திகளிலும்உண்மையில்லை. சோனியா காந்தி அவர்களுடன் திமுக எந்தவிதமான தொடர்பிலும் இல்லை. எந்த வழியிலும்நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை.
ஆனால், திமுக கூட்டத்துக்கு வருமாறு நாங்கள் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்துஸ்தான்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நான் அந்தப் பத்திரிக்கையை உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பவன். அதில்இப்படிப்பட்ட செய்தி வந்தது வருத்தம் தருகிறது.
ரூ. 5,000க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் அரிசி கிடையாது, ரேஷன் பொருட்கள் எதுவும்கிடையாது என்று தமிழக அரசு பச்சையாகவே கூறி விட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு கெளரவஅட்டை என்று கூறி மக்களை ஏமாற்றுவது ஏன்.
மின்சாரத்தின் மீது மேலும் 5 சதவீத வரி போட்டுள்ளார் ஜெயலலிதா. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்என்றார் அண்ணா. ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்ட மக்கள் இதையும் தாங்கிக் கொள்ள வேண்டியது தான் என்றார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications