மீண்டும் டாக்டர் பட்டம் பெற்றார் ஜெயலலிதா
திருச்சி:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.முதுமுனைவர் என்ற கெளரவ பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 20-வது பட்டமளிப்பு விழாவின்போது ஆளுநரும்,பல்கலைக்கழக வேந்தருமான ராம் மோகன் ராவ் ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
கல்வித் துறையை முன்னேற்ற பாடுபட்டதற்காகவும், தரிசு நில மேம்பாட்டுக்கு பாடுபட்டதற்காகவும்,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காகவும், கோவில்களில் அன்னதானத்திட்டத்தை அமலாக்கியதற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அப்துல் கலாம், மொரீசியஸ் அதிபர் வீராசாமி ரெங்குடு, ஜப்பானிய தத்துவ மேதை சைதாகு இகடோவ்ஆகியோருக்கு இந்தப் பல்கலைக்கழகம் கெளர டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இப்போது அதே பட்டம்ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications