அரசு வழக்கறிஞர்கள் உதவி தேவையில்லை: 3 நீதிபதிகள் நிராகப்பு
சென்னை:
6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கில் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட 3 வழக்கறிஞர்களின் உதவிதேவையில்லை என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளும் கூறி விட்டனர்.
இதனால் 3 வழக்கறிஞர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கலை மீண்டும் பணியில்சேர்ப்பது குறித்த வழக்கு விசாரணை நேற்று காலை தொடங்கியது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள 2 பங்களாக்களில் நீதிபதிகள் விசாரணைநடத்துகிறார்கள்.
இந்த விசாரணைக்கு அரசு சார்பில் நீதிபதிகளுக்கு உதவி செய்ய வழக்கறிஞர்கள் வெங்கடரமணி, கந்தசாமி,கோவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த மூவரையும் அழைத்த நீதிபதிகள், இப்போதுஉங்களது உதவி தேவையில்லை. தேவைப்படும்போது பார்க்கலாம் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.
2-வது நாளாக விசாரணை:
இந் நிலையில் இன்று நடக்கும் 2-வது நாள் விசாரணையின்போது157 பேரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.இவர்கள் அனைவரும் வேளாண்மைத்துறை ஊழியர்கள் ஆவர்.
விசாரணைக்கு தமிழ்செல்வி என்ற பெண் பிறந்து 20 நாளே ஆன பச்சிளம் குழந்தையுடன் வந்தார். தான் பிரசவவிடுப்பில் இருந்தபோது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறி சஸ்பெண்ட்செய்யப்பட்டதாக புகார் கூறினார்.
இன்று ஒவ்வொரு நீதிபதியும் தலா 49 ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். நாளை பிற்பட்டோர் மற்றும் மிகவும்பிற்பட்டோர், உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஊழியர்களிடம் விசாரணைநடைபெறவுள்ளது.
நேற்று தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த 171 ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.
விசாரணையின்போது, ஜூலை 2ம் தேதி வேலைக்கு வராதது ஏன், கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்றஅரசின் உத்தரவு உங்களது கவனத்திற்க வந்ததா, இல்லையா என்ற இரண்டு முக்கிய கேள்விகளையே நீதிபதிகள்கேட்டனர். பதில்களைப் பதிவு செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications