கெளரவ ரேஷன் கார்டுகள்: அரசின் திடீர் கெடுவும் எச்சரிக்கையும்
சென்னை:
மாதம் ரூ. 5,000க்கு மேல் சம்பளம் பெறுகிறவர்கள், வருமான வரி கட்டுகிறவர்கள் வரும் 30ம் தேதிக்குள்தங்களது ரேஷன் கார்டுகளை, கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்களது ரேஷன்கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மாதம் ரூ. 5000க்கு மேல் சம்பளம் பெறுகிறவர்களுக்கு ரேஷன் கடைகளில் இனிமேல் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 30ம் தேதிக்குள் அவர்கள்தங்களது ரேஷன் கார்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கொடுத்து அவற்றை கெளரவ ரேஷன் கார்டாகமாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், அதிகாரிகள் கணக்கெடுத்து அவற்றை கெளரவ ரேஷன் கார்டாக மாற்றுவர் என அரசு அறிவிப்புவெளியிட்டது.
இந் நிலையில், 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ரேஷன் கார்டுகளைக் கொடுத்து அதில் எச்(Higher income group) என்ற முத்திரையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறுவோரின் ரேஷன் கார்டுகள்பறிமுதல் செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.