உடனே சட்டசபையை கூட்டக் கோருகிறார் எஸ்.ஆர்.பி.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலை குறித்து விவாதிக்க சட்டசபையை உடனடியாக கூட்டவேண்டும் என்று தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கோரியுள்ளார்.

சென்னையில் மூப்பனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தேனாம்பேட்டை காங்கிரஸ்மைதானத்தில் மூப்பனாரின் நினைவிடத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்போதுகுழப்பமான சூழ்நலை உள்ளது. தலைமைச் செயலகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அரசு ஊழியர்கள் முழுமையானஅளவில் பணியில் சேர முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை டிஸ்மிஸ் செய்யலாம், சஸ்பெண்ட்செய்யலாம், வேலைக்கு வரக் கூடாது என்று கூறினால், இன்று இந்தியாவில், ஜெயலலிதா உள்ளிட்ட எத்தனையோஅரசியல் தலைவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் பணியில் நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு மிகவும் குறைவாகஉளளது. இதனால் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றார்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மூப்பனார் படத்திற்குமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வாசன் கோஷ்டி நடத்திய நினைவு நிகழ்ச்சியில் இளங்கோவன்பங்கேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+