ரூ. 1.3 கோடி வரி விலக்கு: டெண்டுல்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
பரிசுக் கார் இறக்குமதி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், கிரிக்கெட் வீரர்சச்சின் டெண்டுல்கர், மத்திய நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த குப்பையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில்,
டெண்டுல்கருக்கு பரிசாகக் கிடைத்த பியட் காரை இந்தியாவுக்குக் கொண்டு வர ரூ. 1.3 கோடி அளவுக்கு சுங்க வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது, எனவே அவரது காரை பறிமுதல் செய்ய வேண்டும்என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், இந்த மனு தொடர்பாக 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு டெண்டுல்கர், மத்திய நிதித்துறைச்செயலாளர், மத்திய சுங்க வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications