For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் சிலை பந்தலில் திடீர் தீ: கிருஸ்துவர்கள் மீது இந்து முன்னணி புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை ராயபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பந்தலில் திடீர் என தீ பிடித்துக் கொண்டது.இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள்தான் காரணம் என இந்து முன்னணி புகார் கூறியுள்ளது.

ராயபுரம் ஜி.ஏ. சாலையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இற்காக பந்தல்அமைத்து பூஜைகளும் நடந்து வருகின்றன. மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அதிகாலை 5 மணியளவில் விநாயகர் சிலை இருந்த பந்தலில் தீப் பிடித்தது. வேகமாக பரவிய தீசிலையின் பீடத்திற்கும் பரவியது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தோர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல்கொடுத்தனர்.

தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்து, பாதி கருகிய நலையில் இருந்த விநாயகர் சிலையை மீட்டனர்.

இந்தத் தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புப் படையினர் கூறுகின்றனர்.

ஆனால், இது சதிச் செயல் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த பால் என்பவரின் தலைமையிலான கிறிஸ்தவர்களேஇந்த தீ விபத்துக்குக் காரணம் என்று இந்து முன்னணி அமைப்பு புகார் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து பால் விசாரணைக்காக ராயபுரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X