For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் தொடர் கொள்ளை: மக்கள் பீதி

By Staff
Google Oneindia Tamil News

கோயம்பத்தூர்:

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் நடந்த தொடர் கொள்ளை காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது.

வெள்ளலூர் பகுதியில் உள்ள கனகசபை என்பவன் மகனுக்குத் திருமணம் நடந்தது. இதையடுத்து அவரது வீட்டினர்அனைவரும் வீட்டைப் பூட்டி விட்டு கல்யாண மண்டபத்திற்குச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று, கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பினர்.

பின்னர் அருகில் உள்ள எம்.ஜி. நகர் பகுதியில் வசிக்கும் திலகவதி என்பவன் வீட்டிற்குள் புகுந்த அவர்கள்அங்கிருந்த மளிகைப் பொருட்களை திருடினர்.

பின்னர் அருகில் உள்ள நாராயணன் என்ற விவசாயின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றனர். ஆனால் நாராயணன்கொள்ளையர்களைத் தடுக்க முயன்றார். அப்போது அவர்கள், நாராயணனை கத்தியால் குத்தி விட்டுத் தப்பினர்.

இந்த துணிகர தொடர் கொள்ளை தொடர்பாக வெள்ளலூர் பகுதியில் பெரும் பதற்றம், பீதியும் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X