காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூ.
செப்டம்பர் 03, 2003
காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூ.
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரட் கூறியுள்ளார்.
சென்னை வந்த காரட் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியின் மத்திய நிர்வாகக் குழு(பொலிட்பீரோ) கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது கூட்டணிகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதுவரை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்தமுடிவையும் கட்சி எடுக்கவில்லை. இருப்பினும் கொல்கத்தாவில் நடந்த கட்சியின் கூட்டத்தில்,காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவையொட்டி டெல்லிபொலிட்பீரோ கூட்டத்திலும் முடிவெடுக்கப்படும்.
டெல்லி, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல்களில் குறைந்தஅளவிலான இடங்களிலேயே போட்டியிட முடிவு செய்துள்ளோம். இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதால் இந்த முடிவு. இருப்பினும் பா.ஜ.க.வைதோற்கடிப்பதே எங்களது முக்கிய இலக்காக இருக்கும். மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தலில்நாங்கள் பங்கேற்க மாட்டோம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவுகொடுப்பார்கள். இருப்பினும் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம்.
அயோத்திப் பிரச்சினைக்கு நீதிமன்றத் தீர்வே சரியானதாக இருக்க முடியும். ஆனால் நீதிமன்றத்தீர்வை தவிர்த்து விட்டு குறுக்கு வழியில் தீர்வு காண மத்திய அரசு முயலுகிறது. பேச்சுவார்த்தைமூலம் தீர்வு என்பது மிகவும் கடினமாக செயலாக நாங்கள் கருதுகிறோம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லிபரான் கமிஷன் முன்பு முன்னாள் முதல்வர்கல்யாண் சிங் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால் அவர் அதைத் தவிர்த்து வருகிறார்.இது தவறானதாகும் என்றார் காரட்.