6ம் தேதி போர் விமானங்கள் சாகஸ நிகழ்ச்சி: சென்னை விமான நேரங்கள் மாற்றம்
செப்டம்பர் 03, 2003
6ம் தேதி போர் விமானங்கள் சாகஸ நிகழ்ச்சி: சென்னை விமான நேரங்கள் மாற்றம்
சென்னை:
சென்னையில் வரும் 6ம் தேதி போர் விமானங்களின் சாகஸ நிகழ்ச்சி நடைபெறவுள்ளதையடுத்து, அன்றைய தினம்மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து செல்லும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11 மணி வரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து எந்தவிமானமும் கிளம்பாது. விமான நிலைய்ததுக்கும் எந்த விமானமும் வராது.
இந்த போர் விமான கண்காட்சிக்கான ஒத்திகை சென்னை மெரீனா கடற்கரைப் பகுதி வான்வெளியில் நேற்றுநடந்தது. இதில் பல்வேறு விமானங்கள் செய்து காட்டிய சாகஸங்களை நூற்றுக்கணக்கான பொது மக்கள் கண்டுகளித்தனர்.
தமிழகத்தில் இது போன்ற விமான சாகச நிகழ்ச்சி நடத்தப் போவது இதுவே முதல் முறையாகும். முதல்வர்ஜெயலலிதாவும் இதை கண்டுகளிக்க உள்ளார்.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடந்தது. இதில் விமானப் படையின் அதிநவீன விமானமான சுகோய் 30 எம்.கே ரக விமானங்கள், மிராஜ், மிக், சூர்யா கிரண் விமானங்கள் ஆகியவைகலந்து கொண்டு சாகசம் செய்து காட்டின.
6ம் தேதி நடக்கும் விமான சாகஸ நிகழ்ச்சியில் பெங்களூர், புனே மற்றும் தாம்பரம் விமானப்படை தளங்களைச்சேர்ந்த 67 போர் விமானங்கள் கலந்து கொண்டு சாகச விருந்தளிக்க உள்ளன.
விமானப் படையில் சேர தமிழக இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக ஏர் மார்ஷல் சதீஷ் ஜெயின் தெரிவித்தார்.