தாய், மகள் சரமாரியாக குத்திக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிக்குளம் என்ற இடத்தில் தாயும்,மகளும் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
குருவிக்குளத்தில் வசித்து வந்தவர்கள் கனகலட்சுமி (35), அவரது மகள் சத்யா (13).கனகலட்சுமிக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்ததாகத்தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை இருவரும் தங்களது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.இருவரது உடலிலும் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டன.
இன்று அதிகாலை கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications