For Daily Alerts
Just In
விநாயகர் சிலை கரைப்பு: ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு
ஈரோடு:
ஈரோட்டில் உள்ள பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளைக் கரைத்தபோது, பக்தர்கள் 3 பேர் நீரில்மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலைகளைஈரோடு மாவட்டம் பவானி ஆற்றிற்குக் கொண்டு வந்தனர். அங்கு விநாயகர் சிலைகளைக்கரைத்தனர்.
ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடியதாலும், சேறான பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்கமுயன்றதாலும் சிலர் நீரில் மூழ்கினர். இதில் கார்த்திக், ரமேஷ் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியஇளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.


