ஊட்டி சென்றார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு வார கால பயணமாக முதல்வர் ஜெயலலிதா இன்று ஊட்டி வந்து சேர்ந்தார்.
முதல்வர் ஜெயலலிதா நீலகிரியில் அரசின் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், ஓய்வுஎடுப்பதற்காகவும் அங்கு ஒரு வார கால பயணமாக இன்று காலை கோவை சென்றார். பிற்பகல்12.20 மணியளவில் கோவை சென்ற முதல்வர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 1மணியளவில் ஊட்டி சென்றார்.
அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். படுகர்இனத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வருக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் நடனம் மற்றும் இசைநிகழ்ச்சியை நடத்தினர். பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்திற்கு முதல்வர்சென்றார்.
முதல்வர் செல்லும் வழியெங்கும் அலங்கார தோரணங்கள், வளைவுகள் ஆகியவைவைக்கப்பட்டிருந்தன. முதல்வருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார்.












Click it and Unblock the Notifications