For Daily Alerts
Just In
வந்துருச்சு "மெட்ராஸ் ஐ"!!
சென்னை:
சென்னை நகரில் "புகழ் மிக்க" மெட்ராஸ் ஐ கண் நோய் வேகமாகப் பரவி வருகிறது.
வைரஸ்களால் பரவும் இந்த மெட்ராஸ் ஐ ஒரு தொற்று நோயாகும். வழக்கமாக கோடையில் பரவும்இந்த நோய் இப்போது சென்னை நகரில் பரவி வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு மெட்ராஸ் ஐ தாக்குதலுடன் வரும்நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக பல மடங்காக அதிகரித்துள்ளது.
அதிக அளவில் மெட்ராஸ் ஐ நோயாளிகள் வந்தவண்ணம் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.இந்த நோய் தாக்கியவர்கள் அதை அலட்சியப்படுத்தாமல், அருகில் உள்ள கண் டாக்டர்களைஅணுகி உரிய மருந்துகளைப் பயன்படுத்துமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments
Story first published: Friday, September 12, 2003, 5:30 [IST]