ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: புதுவை காங். கோஷ்டிகளுடன் மேலிடப் பார்வையாளர் சந்திப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்களுடன்மேலிடப் பார்வையாளர் சத்யஜித் கெய்க்வாட் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
பாண்டிச்சேரியில் உள்ள ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதிக்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கவுள்ளது. இதில்வேட்பாளராகப் போட்டியிட பாண்டி. காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சத்யஜித் கெய்க்வாட், புதுவை வந்துள்ளார். முதல்வர்ரங்கசாமியை, கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் ஆகியோரையும் அவர் தனித்தன்யேசந்தித்துப் பேசினார். இருவரும் எம்.பி. பதவிக்காக அலாைய் அலைந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் எம்.எல்.ஏக்களையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார் கெய்க்வாட்.
இந்தச் சந்திப்புகளுக்குப் பின் கெய்க்வாட் கூறுகையில், தலைவர்கள், எம்.எல்.ஏக்களின் கருத்துக்களை சோனியாகாந்தியிடம் தெரிவிப்பேன். வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.