அல் கொய்தா மிக பயங்கர தாக்குதல்கள் நடத்தலாம்: அமெரிக்கா
வாஷிங்டன்:
நியூயார்க்கில் நடந்த விமானத் தாக்குதலை விட மிக பயங்கரமான தாக்குதல்களை அல்-கொய்தா அமைப்புநடத்தலாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மீது இந்தத் தாக்குதல்கள் நடக்கக் கூடும் என அமெரிக்கவெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கமான வெடிகுண்டுகள் தவிர ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு அல்-கொய்தாதாக்குதல் நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலைவிட அது மிகக் கடுமையானதாகஇருக்கவும் வாய்ப்புண்டு.
விமானக் கடத்தல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், தலைவர்களைக் கடத்துவது, வெடிகுண்டுத் தாக்குதல்கள் எனஎந்த வகையான தாக்குதலாகவும் அவை இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அல்-ஜசீரா தொலைக்காட்சி பின் லேடன் மற்றும் அவரது வலதுகரமான அய்மான் அல்-ஜவாகிரியின்வீடியோவை ஒளிபரப்பியது. அதில் இருவரும் அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் ஆட்சியாளர்முஷாரப் ஆகியோருக்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவின் மீது மிக பயங்கரமான தாக்குதல்கள் நடக்கும் எனவும் எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications