For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடு பலி கொடுக்க நீதிமன்ற அனுமதி கோரும் வழக்கறிஞர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நேர்த்திக் கடனுக்காக, மதுரை பாண்டி கோவிலில் ஆடு பலி கொடுக்க நீதிமன்றம் அனுமதிக்கவேண்டும் என்று கோரி வழக்கறிஞர் இளங்கோ என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

நான் உடல் நலமின்றி இருந்தபோது, மதுரை, மேலமடை கிராமத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரரின்கோவிலில் ஆடு வெட்டுவதாக எனது மனைவி மஞ்சுளா நேர்த்திக் கடன் செய்திருந்தார்.

உடல் நலம் பெற்றதையடுத்து, நானும் எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் கடந்த 30ம் தேதிபாண்டி கோவிலுக்குப் பாயிருந்தோம். ஆனால், ஆடு வெட்ட போலீஸார் அனுமதிக்கவில்லை.இதனால் எங்களது நேர்த்திக் கடனை செலுத்த முடியவில்லை.

இதனால் ஆடு பலியிடுவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்ய வேண்டும்.குடும்பத்துடன் நான் ஆடு வெட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் இளங்கோ கோரியுள்ளார்.

மேலும், தனது மனுவுடன் இணைத்துள்ள மற்றொரு மனுவில், ஆடு உள்ளிட்ட விலங்குகளைவெட்டிப் பலி கொடுப்பது நல்ல செயலாகும், அதனால் அந்த விலங்குகளுக்கு நற்பயனேகிடைக்கும் என்று இந்து சமய அறநிலையத் துறையின் நூலில் கூறப்பட்டிருப்பதையும் வக்கீல்இளங்கோ மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த சமய அறநலையத்துறை வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தில், துர்கா பூஜைபோன்றவற்றின்போது உபயோகப்படுத்தப்படும் பிராணிகளை வதம் செய்தால் அவை நற்கதிஅடைகின்றன. அதனால் எந்தப் பாவம் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக இளங்கோகூறியுள்ளார்.

புத்தகத்தின் நகலையும் அவர் மனுவுடன் இணைத்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணைநடக்கும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X