ஊட்டியிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார் ஜெ
ஊட்டி:
ஊட்டி சென்றுள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார்.
ஒரு வார கால ஓய்வுக்காக சசிகலாவுடன் ஊட்டி சென்றிருந்த ஜெயலலிதா அங்கு நடந்தபிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர், அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இடையே மைசூருக்கும் சென்று அங்குள்ள சாமுண்டேஸ்வரி கோவிலில் சாமி கும்பிட்டார். வைரகிரீடமும் சாத்தினார்.
தனது ஓய்வை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் கோயம்புத்தூர் வரும்ஜெயலலிதா அங்கிருவந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
அண்ணா சிலைக்கு மாலை:
இதற்கிடையே பேரறிஞர் அண்ணாவின் 95-வது பிறந்த நாள் விழா வரும் 15ம் தேதிகொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதாமாலை அணிவிக்கிறார்.
15ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு முதல்வர் மாலைஅணிவிக்கிறார். அதேபோல, வரும் 17ம் தேதி, பெரியாரின் பிறந்த நாளையொட்டி ஜெமினிமேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.