ஜெ.வின் உச்சகட்ட அகங்காரம்: இளங்கோவன் சாடல்
சென்னை:
சென்னை வந்த பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்திக்காமல், அவர் டெல்லி போன பின் காவிரி தொடர்பாக கடிதம்எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் செயல் அகங்காரத்தின் உச்சகட்டமாகும் என்று காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் அவலர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்தபோது, அவரை நேரில் சென்றுவரவேற்காமல் அவமானப்படுத்திய ஜெயலலிதா, அவர் டெல்லிக்குப் புறப்பட்டுப் போன பிறகு காவிரி பிரச்சினைதொடர்பாக கடிதம் அனுப்பியதாகக் கூறுகிறார். இது ஜெயலலிதாவின் உச்சகட்ட அகங்காரமாகும்.
இதன் மூலம், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கும் ஜெயலலிதா துரோகம் இழைத்து விட்டார். பிரதமர்இங்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரிடம் டெல்வா விவசாயிகளின் நிலைமையை விளக்கி தமிழகத்துக்குநியாயம் கிடைக்க வாதிட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு பிரதமர் டெல்லி திரும்பிய பின் அவருக்கு கடிதம்எழுதுகிறாராம்.
வாசன் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொள்ளும் 22 மாவட்ட செயலாளர்கள், உறுப்பினர் விண்ணப்பப்படிவங்களை வாங்கிக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் மீது கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார் இளங்கோவன்.