அரசு ஊழியர் சங்க அலுவலகங்களுக்கு சீல் வைப்பு
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களுக்கும் சீல்வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தையடுத்து பல்வேறு சங்கங்களின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்துசெய்தது. மேலும் தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள சங்க அலுவலகங்களை உடனடியாகக் காலிசெய்யுமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்காக ஒரு வார கெடுவும் விதிக்கப்பட்டது.
கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து சங்க அலுவலகங்களும் பூட்டி சீல்வைக்கப்பட்டுவிட்டன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன்,
தற்போது தலைமைச் செயலக ஊழியர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு விட்டது. இதனால், அரசுக்கும்ஊழியர்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. இதனால், அரசு நிர்வாகம் நிச்சயம்பாதிக்கப்படும் என்றார்.