புதிய தொழிற் கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
சென்னை:
தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசுஅறிவித்துள்ள புதிய தொழிற் கொள்கை முற்றிலும் தொழிலாளர் நலனுக்கு விரோதமானது.
கூட்டுறவுத் துறை உள்ளிட்ட சில துறைகளை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மாநிலவளர்ச்சியும், தொழிலாளர்கள் நலனும் பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் மணல், ஜல்லி திருட்டைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.அதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications