கோபால் இன்னும் விடுவிக்கப்படவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீன் பெற்ற நக்கீரன் கோபால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று தெரிகிறது.

திங்கள்கிழமை இந்த சட்ட நடவடிக்கைகள் துவங்கலாம் என்று கூறப்படுகிறது.

பொடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் அளித்தது. இருப்பினும் அவர்விடுவிக்கப்படவில்லை. அவர் மீதுள்ள வேறு வழக்குகளைக் காரணம் காட்டி அவர் தொடர்ந்து உள்ளேயேவைக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந் நிலையில் தமிழக அரசின் வவக்கறிஞர் சுப்ரமணியம், சிபிசிஐடி டிஐஜி மற்றும் அதிமுக வழக்கறிஞர் ஜோதிஆகியோர் இன்று அவசரமாக டெல்லி விரைந்தனர்.

இதனால், கோபாலுக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்றுதெரிய வருகிறது.

இளங்கோவன் கண்டனம்:

கோபாலை ஜாமீனில் விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அவரை வெளியில் விடாமல்சிறையிலேயே வைத்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று தமிழக அரசுக்கு, காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொடா வழக்கில் கோபாலை கைது செய்ததில்அடிப்படை இல்லை என்று கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை மதித்து நேற்றே கோபால் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர்விடுவிக்கப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.

புழல் பகுதியில் மத்திய சிறை அமைக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில்தமிழ்த் தாய் வாழ்த்தோ, தேசிய கீதமோ இசைக்கப்படவில்லை. இது நாட்டையே அவமதிக்கும் செயலாகும்.மத்திய அரசு இது குறித்து ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+